செய்திகள்
அலகுமலையில் பிப்ரவரி மாதம் ஜல்லிக்கட்டு நடத்த முடிவு
கொரோனா பேரிடர் காலத்தில் உயிர்நீத்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அடுத்த அலகுமலை மலைப்பாளையத்தில் ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைவர் பழனிசாமி தலைமையில் நடந்தது.
இதில் கொரோனா பேரிடர் காலத்தில் உயிர்நீத்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. ஜல்லிக்கட்டு விழா நடப்பதற்கு அரசு நிரந்தர இடம் ஒதுக்கித் தருதல், சங்க நிர்வாகிகளுக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்குதல், வரும் பிப்ரவரி மாதம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துதல்.
மேலும் ஜல்லிக்கட்டுக்கு அமைச்சர்கள், முதல்வர் ஆகியோரை அழைத்தல், கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு நன்கொடை கொடுத்தவர்கள், ஒத்துழைப்பு தந்த அதிகாரிகள், ஆட்சியாளர்கள், ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகர், பேரவை குழுவினர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.