செய்திகள்
கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் புதிதாக 1,152 பேருக்கு கொரோனா தொற்று- 19 பேர் மரணம்

Published On 2021-10-22 15:27 GMT   |   Update On 2021-10-22 15:27 GMT
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,152 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,152 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  26 லட்சத்து 92 ஆயிரத்து 949 ஆக உயர்ந்துள்ளது. 

தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 1,392 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.  

தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 1 லட்சத்து 29 ஆயிரத்து 573 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.  தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 13,531 ஆக உள்ளது. 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News