செய்திகள்
கைது

உளுந்தூர்பேட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது

Published On 2021-10-22 13:01 GMT   |   Update On 2021-10-22 13:01 GMT
உளுந்தூர்பேட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை:

உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் இலுப்பையூர் கிராமத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடியதாக அதே பகுதியை சேர்ந்த குமார் (வயது 36), சுரேஷ் (38) உள்பட 4 பேரை கைது செய்தனர். இதேபோல் திருநாவலூர் அருகே திமி ரெட்டிபாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த கோதண்டபாணி (45), ஜெய்சங்கர் (40), ஜெயசீலன் (41) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News