செய்திகள்
கும்மிடிப்பூண்டி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
கும்மிடிப்பூண்டி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த மணலி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 55). விவசாயி. இவர் கும்மிடிப்பூண்டி அடுத்த மெதிப்பாளையம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்து தங்கியிருந்தார்.
நேற்று முன்தினம் அங்கு வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து ஆனந்தன் குடித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தனின் தற்கொலைக்கான காரணம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த மணலி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 55). விவசாயி. இவர் கும்மிடிப்பூண்டி அடுத்த மெதிப்பாளையம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்து தங்கியிருந்தார்.
நேற்று முன்தினம் அங்கு வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து ஆனந்தன் குடித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தனின் தற்கொலைக்கான காரணம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.