செய்திகள்
ஆர்.இளங்கோவன்

மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் ஆர்.இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

Published On 2021-10-22 02:18 GMT   |   Update On 2021-10-22 03:17 GMT
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புத்திரகவுண்டன்பாளையத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் ஆர்.இளங்கோவன் வீட்டில் ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை :

சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் ஆர்.இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் காலை 6 மணிமுதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

சேலம், சென்னை, திருச்சி உள்ளிட்ட 27 இடங்களில் லஞ்சஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புத்திரகவுண்டன்பாளையத்தில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

2014 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

முன்னாள் அமைச்சர் எடிப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவராக அறியப்பட்டவர் ஆர். இளங்கோவன் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News