செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம்.

கூடுதல் போனஸ் வழங்க கோரி திருப்பூரில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2021-10-21 09:36 GMT   |   Update On 2021-10-21 09:36 GMT
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு சுகாதாரப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
திருப்பூர்:

தீபாவளி பண்டிகை நெருங்கி வரக்கூடிய சூழ்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை, விசைத்தறி, பேக்கரி, பாத்திர உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது உள்ள விலைவாசிக்கேற்றவாறு கூடுதல் போனஸ் வழங்க வேண்டும். 

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு சுகாதாரப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். வேலைக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் மாநகராட்சி அலுவலகம் எதிரே இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Tags:    

Similar News