செய்திகள்
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா, உயிரிழந்த காவலர்களுக்கு மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்திய காட்சி.

திருப்பூரில் காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சி

Published On 2021-10-21 08:57 GMT   |   Update On 2021-10-21 08:57 GMT
அனைத்து போலீஸ் நிலையங்களிலும் உயிர் நீத்த காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பூர்:

பணியின்போது தங்கள் இன்னுயிரை ஈந்த நெஞ்சுரமிக்க காவல் வீரர்களின் நினைவாக ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந்தேதியன்று  காவலர் வீர வணக்கம் நாள் கடைபிடிக்கப்படுகிறது. 

இதையடுத்து இன்று வீரவணக்க நாளையொட்டி திருப்பூர் மாவட்டம் முழுவதும் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் உயிர் நீத்த காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உயிரிழந்த காவலர்களுக்கு போலீசார் வீரவணக்கம், அஞ்சலி செலுத்தினர்.

திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள நினைவுத்தூணில் கமிஷனர் வனிதா மலர்வளையம் வைத்து வீரவணக்கம், அஞ்சலி செலுத்தினார். முன்னதாக போலீசார் சார்பில் வீரவணக்க மரியாதை செலுத்தப்பட்டது. இதில் போலீசார் மற்றும் கமிஷனர் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.    
Tags:    

Similar News