செய்திகள்
கோப்புபடம்

பல்லடம் அருகே சிறு, குறு விவசாயிகளுக்கு சான்று வழங்கும் சிறப்பு முகாம் - நாளை நடக்கிறது

Published On 2021-10-21 07:59 GMT   |   Update On 2021-10-21 07:59 GMT
பல்லடம் வட்டாரத்திலுள்ள சிறு, குறு விவசாயி சான்று மற்றும் சொட்டு நீர் பாசனத்திற்கு 100 சதவீத மானியம் பெற சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
பல்லடம்:

பல்லடம் அருகே சுக்கம்பாளையத்தில் சிறு,குறு, விவசாயிகள் சான்று வழங்கும் சிறப்பு முகாம் நாளை 22-ந்தேதி நடைபெறுகிறது. 

இதுகுறித்து பல்லடம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜெரீனாபேகம், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பல்லடம் வட்டாரத்திலுள்ள சிறு, குறு விவசாயி சான்று மற்றும் சொட்டு நீர் பாசனத்திற்கு 100 சதவீத மானியம் பெற சிறப்பு முகாம் வருகிற 22-ந்தேதி சுக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. 

எனவே அரசு மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க விரும்பும் அனைத்து விவசாயிகளும் சிட்டா, அடங்கல், உரிமைச்சான்று, நிலத்தின் பத்திர நகல், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2  ஆகியவற்றுடன் சிறு, குறு, விவசாயி சான்றுக்கு விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News