செய்திகள்
தற்கொலை

சங்ககிரி அருகே குடும்ப தகராறில் கணவன் -மனைவி தற்கொலை

Published On 2021-10-21 07:46 GMT   |   Update On 2021-10-21 07:46 GMT
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே குடும்ப தகராறு காரணமாக கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
சங்ககிரி:

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி, (வயது 31). இவர் சொந்தமாக டிப்பர் லாரி வைத்து காண்ட்ராக்ட் வேலை செய்து வந்தார். இவரது மனைவி பிரியா(28).

இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது. கார்த்திக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் பிரியா அவரை கண்டித்தார். இதன்காரணமாக அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

நேற்று இரவு கணவன்- மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த பிரியா இன்று காலை தனது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த கார்த்தி கதறி அழுதார். பின்னர் வேதனை தாங்காமல் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். பின்பு திடீரென வீட்டை விட்டு வெளியே சென்று வைகுந்தம் செல்லியம்மன் கோவில் அருகில் உள்ள வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அடுத்தடுத்த சம்பவம் அந்த ஊர் மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

இதுகுறித்து தகவல் அறிந்த சங்ககிரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, கார்த்தி மற்றும் பிரியா பிணத்தை கைப்பற்றி சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கார்த்தி, பிரியா தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News