செய்திகள்
கைது

காரிமங்கலம் பகுதியில் மது விற்ற 2 பேர் கைது

Published On 2021-10-20 19:38 GMT   |   Update On 2021-10-20 19:38 GMT
காரிமங்கலம் பகுதியில் மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரிமங்கலம்:

காரிமங்கலம் பகுதியில் மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக வந்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் தீவிர ரோந்து சென்றனர். அப்போது மது விற்பனை செய்த பச்சையம்மாள் (வயது32), சந்தோஷ் (24) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த 60 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News