செய்திகள்
கோப்புபடம்

கீரம்பூர் அருகே மது விற்றவர் கைது - 38 பாட்டில்கள் பறிமுதல்

Published On 2021-10-20 13:11 GMT   |   Update On 2021-10-20 13:11 GMT
கீரம்பூர் அருகே மது விற்பனையில் ஈடுபட்டவரை கைது செய்த போலீசார் 38 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பரமத்திவேலூர்:

கீரம்பூர் அருகே உள்ள புலவர்பாளையம் பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்தனர். 

அப்போது அங்கு மது விற்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் அதேபகுதியை சேர்ந்த தங்கராஜ் (வயது 54) என்பதும், டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கி விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 38 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News