செய்திகள்
கோப்புபடம்.

தாராபுரத்தில் விநாயகர் சிலையை உடைத்த வாலிபர் கைது

Published On 2021-10-19 11:10 GMT   |   Update On 2021-10-19 11:10 GMT
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த மணிகண்டனை கைது செய்தனர்.
தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாடார் தெரு பகுதியில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 17 -
ந்தேதி மதியம் வள்ளியம்மாள் என்பவர் சாமி கும்பிட சென்றார். அப்போது அங்கு வந்த மணிகண்டன் ( 27 ) என்பவர் குடிபோதையில் வள்ளியம்மாளை தகாத வார்த்தையால் திட்டியதுடன், கோவிலில் இருந்த விநாயகர் சிலையை உடைத்து தகராறில் ஈடுபட்டார். 

இதையடுத்து வள்ளியம்மாள் அபிராமபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த மணிகண்டனை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். 
Tags:    

Similar News