செய்திகள்
சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவ, மாணவிகள்.

அடிமுறை சாம்பியன்ஷிப் போட்டி - பதக்கங்களை குவித்த வீரர்களுக்கு வாழ்த்து

Published On 2021-10-19 08:56 GMT   |   Update On 2021-10-19 08:56 GMT
மடத்துக்குளம் பகுதியை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மினி சப் - ஜூனியர், சப் - ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் பங்கேற்றனர்.
மடத்துக்குளம்:

தமிழ்நாடு அடிமுறை சங்கம் மற்றும் விருதுநகர் மாவட்ட அடிமுறை சங்கம் சார்பில் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் மாநில அளவிலான மூன்றாவது அடி முறை சாம்பியன் ஷிப் போட்டி அருப்புக்கோட்டையில் உள்ள சௌடாம்பிகா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

இதில் மடத்துக்குளம் பகுதியை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மினி சப்- ஜூனியர், சப் - ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் பங்கேற்றனர். 

மடத்துக்குளம் உயிர் கலை தற்காப்பு சங்கத்தின் சார்பாக பயிற்சியாளர் வினோத்குமார் தலைமையில் 14 மாணவ மாணவிகள் கலந்துகொண்டு மொத்தம் 14 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். 

பதக்கங்களை குவித்த விளையாட்டு வீரர்களை மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ., சி.மகேந்திரன் வாழ்த்து கூறி பாராட்டினார்.
Tags:    

Similar News