செய்திகள்
மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி பலி
மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி பலியான சம்பவம் தொடர்பாக களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
களக்காடு:
மேற்கு வங்க மாநிலம் முசிதாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் பாது பக்காரியா மகன் அமல் பக்காரியா (வயது 25). இவர் தனது மனைவி திபாலி, மாமனார் கஜால் சர்தார் ஆகியோருடன் களக்காடு அருகே இடையன்குளம் விலக்கு மங்கம்மாள் சாலையில் உள்ள பூதத்தான்குடியிருப்பை சேர்ந்த பால்ராஜ்க்கு சொந்தமான செங்கல் சூளையில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல் செங்கல் சூளையில் வேலை பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு தரையில் கிடந்த மின்வயரை தொட்டார். இதில் அவர் மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். உடனே அவரை தொழிலாளர்கள் மீட்டு, சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றிய புகாரின் பேரில் களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேற்கு வங்க மாநிலம் முசிதாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் பாது பக்காரியா மகன் அமல் பக்காரியா (வயது 25). இவர் தனது மனைவி திபாலி, மாமனார் கஜால் சர்தார் ஆகியோருடன் களக்காடு அருகே இடையன்குளம் விலக்கு மங்கம்மாள் சாலையில் உள்ள பூதத்தான்குடியிருப்பை சேர்ந்த பால்ராஜ்க்கு சொந்தமான செங்கல் சூளையில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல் செங்கல் சூளையில் வேலை பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு தரையில் கிடந்த மின்வயரை தொட்டார். இதில் அவர் மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். உடனே அவரை தொழிலாளர்கள் மீட்டு, சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றிய புகாரின் பேரில் களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.