செய்திகள்
விபத்து பகுதி.

பல்லடம் அருகே விபத்தில் சிறுவன் பலி

Published On 2021-10-19 07:34 GMT   |   Update On 2021-10-19 07:34 GMT
பலியான சிறுவன் பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகரைச் சேர்ந்த மாறன் மகன் வெற்றிவேல் என்பது தெரியவந்துள்ளது.
பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள சேடபாளையம் - அறிவொளி நகர் ரோட்டில் நேற்று மாலை ஒரே மோட்டார் சைக்கிளில் 3 சிறுவர்கள் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த வாகனமும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர் ஒரு சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தார். பல்லடம் போலீசார் விசாரணையில், பலியான சிறுவன் பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகரைச் சேர்ந்த மாறன் மகன் வெற்றிவேல் (வயது 14) என்பது தெரியவந்துள்ளது. விபத்து குறித்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News