செய்திகள்
திருத்தணி அருகே மினி லாரியில் 1¼ டன் ரேஷன் அரிசி கடத்தல்- வாலிபர் கைது
திருத்தணி அருகே மினி லாரியில் 1¼ டன் ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிப்பட்டு:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராமஞ்சேரி என்ற பகுதியிலிருந்து நேற்று காலை மினி லாரி வந்தது.
அப்போது அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் தலைமையிலான தனிப்படையினர் அந்த மின்வேனை மடக்கி சோதனை செய்தனர். அதில், சுமார் 1,400 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசி 50 மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.
அதை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட ஆந்திர மாநிலம் நகரியை சேர்ந்த தினேஷ் (வயது 27) என்பவரை கைது செய்தனர். இவர் திருவள்ளூர் உள்பட அப்பகுதியில் உள்ள பல ரேஷன் கடைகளில் ரேஷன் அரிசியை பெற்று ரகசியமாக ஆந்திர மாநிலத்துக்கு கடத்தியது தெரியவந்தது. இதுகுறித்து திருவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கனகம்மாசத்திரம் போலீசில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக திருவள்ளூர் மாவட்ட உணவு தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.