செய்திகள்
அன்பில் மகேஷ்

முதுகலை ஆசிரியர் தேர்வு: வயது வரம்பு கடந்தவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சலுகை- அமைச்சர் அன்பில் மகேஷ்

Published On 2021-10-18 13:42 GMT   |   Update On 2021-10-18 13:42 GMT
மழலையர்கள் வகுப்புகள் தொடங்குவது குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 9 முதல் 10-ம் வகுப்புக்கான பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நீண்ட நாட்கள் பள்ளிக்கு செல்லாத காரணத்தால் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்படும் அபாயம் உள்ளதாக கருதப்படுவதால், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து வருகிற 1-ந்தேதியில் இருந்து ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி வருகிற 1-ந்தேதி (நவம்பர்) முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படும் எனக் கூறிய தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ‘‘மழலையர்கள் வகுப்புகளை திறப்பது குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை. முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான வயது வரம்பு கடந்தவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சலுகை வழங்கப்படும்’’ என்றார்.
Tags:    

Similar News