செய்திகள்
அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை தின்று நகை பட்டறை உரிமையாளர் தற்கொலை
கோவை பெரியக்கடை வீதி அருகே அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை தின்று நகை பட்டறை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை பெரியக்கடை வீதி அருகே உள்ள கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 68). இவர் அந்த பகுதியில் தங்க நகை பட்டறை வைத்து நடத்தி வந்தார். இவர் கடந்த சில மாதங்களாக தூக்கமின்மையால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் உடல்நிலை சரியாகவில்லை. இதன் காரணமாக ஆனந்தகுமார் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டார். சிறிது நேரத்தில் மயங்கினார்.
இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஆன்ந்தகுமாரை டாக்டர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பெரியக்கடை வீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை பெரியக்கடை வீதி அருகே உள்ள கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 68). இவர் அந்த பகுதியில் தங்க நகை பட்டறை வைத்து நடத்தி வந்தார். இவர் கடந்த சில மாதங்களாக தூக்கமின்மையால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் உடல்நிலை சரியாகவில்லை. இதன் காரணமாக ஆனந்தகுமார் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டார். சிறிது நேரத்தில் மயங்கினார்.
இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஆன்ந்தகுமாரை டாக்டர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பெரியக்கடை வீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.