செய்திகள்
வீட்டிற்கு சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட காட்சி.

திருப்பூரில் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி

Published On 2021-10-18 10:35 GMT   |   Update On 2021-10-18 10:35 GMT
திருப்பூரில் இன்று 43,960 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 19.95 லட்சம் பேரில் தற்போது வரையில் சுமார் 16 லட்சம் பேருக்கு முதல் தவணையும், 4.50 லட்சம் பேருக்கு இரண்டாவது தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது.

இதன் மூலம் 43,960 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. மேலும் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
Tags:    

Similar News