செய்திகள்
விஜயபாஸ்கர்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

Published On 2021-10-18 02:15 GMT   |   Update On 2021-10-18 02:15 GMT
2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போது ரூ. 6.41 கோடி சொத்து இருப்பதாக விஜயபாஸ்கர் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான குவாரி மற்றும் வீடுகளில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருவேங்கைவாசல் பகுதியிலுள்ள அவரது குவாரி மற்றும் வீடுகளில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட 43 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

அமைச்சராக இருந்த காலத்தில் மனைவி, மகள்கள் பெயரில் சொத்து வாங்கி குவித்ததாக வழக்குப்பதிவு செய்து இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போது ரூ. 6.41 கோடி சொத்து இருப்பதாக விஜயபாஸ்கர் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் அண்ணன் உதயகுமாரின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News