செய்திகள்
விபத்து பலி

கரூர் அருகே அரசு பஸ் மோதி பெண் பலி

Published On 2021-10-17 12:57 GMT   |   Update On 2021-10-17 12:57 GMT
கரூர் அருகே அரசு பஸ் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:

கரூர் பஸ் நிலையம் பின்புறம் உள்ள பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக அந்த பெண் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் செந்தாமரை செல்வி கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். பஸ் மோதி இறந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News