செய்திகள்
அபராதம்

பள்ளிபாளையத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த 30 பேருக்கு அபராதம்

Published On 2021-10-17 12:47 GMT   |   Update On 2021-10-17 12:47 GMT
இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்த 30 பேருக்கு தலா 100 ரூபாய் வீதம் அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில், ராஜா, டேவிட் மற்றும் போலீசார் பள்ளிபாளையம் பஸ் நிலைய ரோடு, பாலம் ரோடு, ஒட்டமெத்தை ரோடு ஆகிய பகுதிகளில் வாகன சோதனை நடத்தினர். அப்போது இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்த 30 பேருக்கு தலா 100 ரூபாய் வீதம் அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
Tags:    

Similar News