செய்திகள்
கைது

பள்ளிபாளையம் அருகே சாராயம் காய்ச்சி விற்றவர் கைது

Published On 2021-10-17 12:35 GMT   |   Update On 2021-10-17 12:35 GMT
பள்ளிபாளையம் அருகே சாராயம் காய்ச்சி விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் அருகே மொளசி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பிலிக்கல்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் தலைமையில் போலீசார் பிலிக்கல்பாளையத்தில் உள்ள அந்த வீட்டுக்கு சென்றனர். அங்கு பாலன் (வயது 44) என்பவர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 2 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் திருச்செங்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Tags:    

Similar News