செய்திகள்
திருப்பூர் அருகே இன்று லாரி மோதி இலங்கை தமிழர் பலி
விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 2 பேரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள பெருமாநல்லூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த 3 வாலிபர்கள் இன்று காலை மோட்டார் சைக்கிளில் பெருமாநல்லூர் சந்தைப்பேட்டை பகுதியில் சென்றனர்.
அப்போது சாலையை கடக்க முயற்சித்த போது அந்த வழியாக வந்த மினி லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 2 பேரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர்.
உடனே அவர்களை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.