செய்திகள்
ஜெயலலிதா சிலைக்கு ஓ பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தலைமை அலுவலகத்தில் பொன்விழா கொண்டாட்டம் -அதிமுக கொடியேற்றிய ஒபிஎஸ், ஈபிஎஸ்

Published On 2021-10-17 06:51 GMT   |   Update On 2021-10-17 07:02 GMT
அதிமுக பொன்விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினர்.
சென்னை:

மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர் அதிமுக கட்சி தொடங்கி இன்றுடன் நாற்பத்தி ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்து, 50 ஆண்டு தொடங்குகிறது. இதனை அடுத்து அதிமுக சார்பில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ள நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



மேலும், இருவரும் அதிமுக கட்சி கொடியை தலைமை அலுவலகத்தில் ஏற்றி வைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினர்.  அது மட்டுமல்லாமல்  மக்கள் தொண்டில் மகத்தான் 50 ஆண்டுகள் என்ற தலைப்பில் அதிமுக பொன்விழா சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.  தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் தயாரிக்கப்பட்ட பொன்விழா பாடலை ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி வெளியிட்டனர். 

இதனைத் தொடர்ந்து  தலைமை அலுவலகத்தில் இருந்து  சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினர்.


Tags:    

Similar News