செய்திகள்
நச்சலூர் அருகே மது விற்ற 2 பேர் கைது
நச்சலூர் அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நச்சலூர்:
நச்சலூர் பகுதியில் சிலர் மது விற்பதாக குளித்தலை போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதன் பேரில் குளித்தலை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது சவாரி மேடு பகுதியில் அவரது வீட்டில் வைத்து மது விற்ற ரவி (வயது 45) என்பவரையும், இதேபோல் நெய்தலூர் இந்திராநகர் பகுதியில் மது விற்ற மகேந்திரன் (48) என்பவர் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.