செய்திகள்
தற்கொலை

கிருஷ்ணராயபுரம் அருகே தொழிலாளி தற்கொலை

Published On 2021-10-16 11:10 GMT   |   Update On 2021-10-16 11:10 GMT
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே மது அருந்துவதை தாய் கண்டித்ததால் மனமுடைந்த தொழிலாளி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கரூர்:

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகில் கொமேட்டேரியை சேர்ந்தவர் விஜி. கட்டிட தொழிலாளியான இவர், கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மது அருந்திக்கொண்டு இருந்துள்ளார். இதனை பார்த்த அவரது தாயார் கண்டித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த விஜி, வீட்டில் விவசாயத்திற்கு பயன்படுத்த வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார். சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். அவரை அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை தபால் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக விஜி உயிரிழந்தார்.

இது குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News