செய்திகள்
கைது

தஞ்சை மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 5 பேர் கைது

Published On 2021-10-16 11:04 GMT   |   Update On 2021-10-16 11:04 GMT
தஞ்சை மாவட்டத்தில் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் 5 பேரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள கரம்பை குடியானதெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 27). இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.

இதனால் வெங்கடேசனின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவருக்கு, போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவுப்படி வெங்கடேசன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

இதேப்போல் காட்டு குறிச்சி குடியானதெருவை சேர்ந்த அரவிந்த் (25), மெலட்டூர் அருகே உள்ள குச்சிப்பாளையம் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரசாந்த் (28), கரம்பையை சேர்ந்த முத்துகுமார் (22), கரம்பை குடியான தெருவை சேர்ந்த சுரேஷ் (39) ஆகிய 4 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
Tags:    

Similar News