செய்திகள்
ஆம்பூர் அருகே பாலாற்று வெள்ளத்தில் சிக்கி மூதாட்டி மரணம்
ஆம்பூர் அருகே பாலாற்று வெள்ளத்தில் சிக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர்:
ஆம்பூர் வெங்கிலியை சேர்ந்தவர் மார்ட்டின், இவரது மனைவி முனியம்மாள் (வயது 66). இவர்களுக்கு வெங்கிலி பாலாற்றின் அருகே விவசாய நிலம் உள்ளது. கடந்த 12-ந் தேதி நிலத்தில் உள்ள தென்னை மட்டைகளை எடுப்பதற்காக முனியம்மாள் அங்கு சென்றார். அப்போது பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது.
இதை அறியாமல் பாலாற்றின் கரையோரம் தென்னை மட்டைகளை எடுத்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக வெள்ளத்தில் சிக்கி அடித்துச்செல்லப்பட்டார்.
இதனால் தனது தாயார் காணவில்லை என்று முனியம்மாளின் மகன் ஜோசப் ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் 13-ந் தேதி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில் பாலாற்றின் கரையோரம் முனியம்மாள் பிணமாக இருப்பதை பொதுமக்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
ஆம்பூர் வெங்கிலியை சேர்ந்தவர் மார்ட்டின், இவரது மனைவி முனியம்மாள் (வயது 66). இவர்களுக்கு வெங்கிலி பாலாற்றின் அருகே விவசாய நிலம் உள்ளது. கடந்த 12-ந் தேதி நிலத்தில் உள்ள தென்னை மட்டைகளை எடுப்பதற்காக முனியம்மாள் அங்கு சென்றார். அப்போது பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது.
இதை அறியாமல் பாலாற்றின் கரையோரம் தென்னை மட்டைகளை எடுத்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக வெள்ளத்தில் சிக்கி அடித்துச்செல்லப்பட்டார்.
இதனால் தனது தாயார் காணவில்லை என்று முனியம்மாளின் மகன் ஜோசப் ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் 13-ந் தேதி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில் பாலாற்றின் கரையோரம் முனியம்மாள் பிணமாக இருப்பதை பொதுமக்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.