செய்திகள்
கோப்புபடம்.

நோய் கொடுமையால் தொழிலாளி தற்கொலை

Published On 2021-10-16 10:17 GMT   |   Update On 2021-10-16 10:17 GMT
கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட சண்முகலிங்கம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள சாமிகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகலிங்கம் (வயது 45). இவரது மனைவி கற்பகவள்ளி (36). இந்தநிலையில் சண்முகலிங்கத்திற்கு இடது கன்னத்தில் கேன்சர் நோய் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

கற்பகவள்ளி வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்தார். நேற்று முன்தினம், இரவு வேலைக்குச் சென்ற, கற்பகவள்ளி நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது சண்முகலிங்கம் மயங்கிய நிலையில் கிடந்தார். 

இதையடுத்து அவரை பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

இந்தநிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகலிங்கம் உயிரிழந்தார். கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து அவரது மனைவி கற்பகவள்ளி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News