செய்திகள்
ரேஷன் கடை

தீபாவளியையொட்டி ரேஷன் கடைகள் திறப்பு நேரம் அதிகரிப்பு

Published On 2021-10-16 03:40 GMT   |   Update On 2021-10-16 03:40 GMT
நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகை வருவதால், அம்மாதத்தின் 1, 2 மற்றும் 3-ந் தேதிகளில் ரேஷன் கடைகள் திறந்திருக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை உதவி ஆணையர்களுக்கு (தென்சரக மண்டலம்) அத்துறையின் உயர் அதிகாரி அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த 11-ந் தேதி உணவுத்துறை அமைச்சர் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் பயனடையும் வகையில் நவம்பர் மாதத்திற்கான சிறப்பு அத்தியாவசிய பொருட்களை கடைகளுக்கு கொண்டு வருவதை முழுமையாக முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.



மேலும், நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகை வருவதால், அம்மாதத்தின் 1, 2 மற்றும் 3-ந் தேதிகளில் ரேஷன் கடைகள் காலை 8 மணியில் இருந்து மாலை 7 மணி வரை திறக்கப்பட வேண்டும் என்று அந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நவம்பர் மாதத்திற்கான சிறப்பு அத்தியாவசிய பொருட்களின் அதிகபட்சமான முன்நகர்வு முழுமையாக முடிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது.

மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1, 2 மற்றும் 3-ந் தேதிகளில் ரேஷன் கடைகள் காலை 8 மணியில் இருந்து மாலை 7 மணி வரை திறக்கப்பட்டு, அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags:    

Similar News