செய்திகள்
போலீசார் விசாரணை

வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.8½ லட்சம் மோசடி- போலீசார் விசாரணை

Published On 2021-10-15 08:56 GMT   |   Update On 2021-10-15 08:56 GMT
உவரி அருகே கப்பலில் வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.8½ லட்சம் மோசடி செய்த சகாய பார்த்திபனை போலீசார் தேடி வருகிறார்கள்.
நெல்லை:

நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள கூடுதாழை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் டெரஸ். இவரது மகன் ஜெபஸ்.

இவரும், இவரது நண்பர்களும் கப்பலில் வேலைக்கு செல்வதற்காக தூத்துக்குடி பாத்திமா நகரை சேர்ந்த சகாய பார்த்திபன் என்பவரை தொடர்பு கொண்டனர். அவர் கப்பலில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு பணம் கட்ட வேண்டும் எனவும் கூறி உள்ளார்.

இதைத்தொடர்ந்து ஜெபசும், அவரது நண்பர்களும் சேர்ந்து சகாய பார்த்திபனின் வங்கி கணக்கில் நெட் பேங்கிங் மூலம் ரூ.8½ லட்சம் கட்டினர். ஆனால் சகாய பார்த்திபன் வேலை வாங்கி கொடுக்காமல் நீண்ட நாட்கள் கடத்தினார்.

இதைத்தொடர்ந்து ஜெபசும், அவரது நண்பர்களும் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டனர். ஆனால் அவர் அந்த பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.

இதனால் ஜெபஸ் நெல்லை மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி சகாய பார்த்திபன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News