செய்திகள்
கைது

பாபநாசத்தில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

Published On 2021-10-13 10:47 GMT   |   Update On 2021-10-13 10:47 GMT
பாபநாசத்தில் மோட்டார் சைக்கிள் திருடியவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
பாபநாசம்:

பாபநாசம் தெற்கு ராஜவீதியில் கோவிந்த நல்லூரை சேர்ந்த யோகேஷ் (வயது 21) என்பவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்துவிட்டு கடைக்கு பொருள் வாங்க சென்றார். பின்னர் மீண்டும் திரும்பி வந்து பார்க்கும்போது வண்டி திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இது குறித்து யோகேஷ் பாபநாசம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் திருடிய பள்ளியக்ரஹாரத்தை சேர்ந்த முருகானந்தம் (49) என்பவரை கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

இதையடுத்து மாஜிஸ்திரேட் சிவக்குமார் முருகானந்தத்தை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
Tags:    

Similar News