செய்திகள்
கோப்புபடம்

வெள்ளகோவிலில் அழுகிய நிலையில் ஆண் பிணம் மீட்பு

Published On 2021-10-13 09:27 GMT   |   Update On 2021-10-13 09:27 GMT
போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வெள்ளகோவில்:

வெள்ளகோவில் அருகே உள்ள அகலரபாளையம்புதூர் அருகே பி.ஏ.பி. பாசன கிளை வாய்க்கால் செல்கிறது. இந்த கிளை வாய்க்காலில் நேற்று சுமார் 45 வயது முதல் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று அழுகிய நிலையில் மிதந்துகொண்டிருந்தது. 

இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் வெள்ளகோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார் என்பது பற்றி விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News