செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படுமா? - முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

Published On 2021-10-12 21:05 GMT   |   Update On 2021-10-12 21:05 GMT
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
சென்னை:

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் வெகுவாகக் குறைந்துள்ளது. இதையடுத்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. 

இந்நிலையில், அமலில் உள்ள ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது.

தலைமை செயலகத்தில் இன்று காலை நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக மருத்துவத்துறை நிபுணர்கள், மூத்த அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். 

இந்த ஆலோசனைக்கு பின்னர் அமலில் உள்ள ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, விஜயதசமியன்று கோவில்களைத் திறப்பது குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. 

Tags:    

Similar News