செய்திகள்
செங்கிப்பட்டியில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
செங்கிப்பட்டியில் முககவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
வல்லம்:
தஞ்சை மாவட்டத்தில் அதிகாரிகள், போலீசார் பல இடங்களில் முககவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இந்தநிலையில் செங்கிப்பட்டி போலீஸ் நிலையம் அருகில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆனந்தன், சுகாதார ஆய்வாளர் தனபால் மற்றும் அலுவலர்கள் அப்பகுதியில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்.