செய்திகள்
மாயம்

நாகர்கோவிலில் காதல் திருமணம் செய்த இளம்பெண் மாயம்

Published On 2021-10-12 10:40 GMT   |   Update On 2021-10-12 10:40 GMT
நாகர்கோவிலில் காதல் திருமணம் செய்த இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் மறவன் குடியிருப்பு மிக்கேல் தெருவைச் சேர்ந்தவர் மஞ்சு (வயது 19).

இவர், பிரவின் என்பவரை காதலித்து கடந்த 1¼ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. சம்பவத்தன்றும் பிரச்சனை ஏற்பட்டதால் மஞ்சு வீட்டை விட்டு வெளியேறினார்.

இதையடுத்து பிரவின் மனைவி மஞ்சுவை பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் மஞ்சுவை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் மஞ்சுவின் தாயார் செல்வராணி கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

வெட்டூர்ணிமடம் கிறிஸ்துநகர் ராயப்பன் தெருவைச் சேர்ந்தவர் ஸ்டீபன். இவரது மகள் சைஜி (23). இவர், ராமன்புதூரில் உள்ள மெடிக்கல் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற சைஜி, வீடு திரும்பவில்லை.

இதையடுத்து அவரது பெற்றோர் உறவினர் வீடுகள் மற்றும் தோழிகள் வீடுகளில் தேடினர். அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அவரது தாயார் ஹெப்சிபாய் வடசேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News