செய்திகள்
தற்கொலை

சிறையில் இருந்து வெளியே வந்த இளம்பெண் தற்கொலை

Published On 2021-10-12 06:34 GMT   |   Update On 2021-10-12 06:34 GMT
கள்ளக்காதலனுக்காக கணவனை கொன்ற இளம்பெண் ஜாமினில் வெளிவந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டார்.
மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன் பட்டியைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 32). இவர் தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு வைஷ்ணவி (28) என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

வைஷ்ணவிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை கணவன் கண்டித்துள்ளார். இருந்தபோதும் அவர்களது தொடர்பு நீடித்து வந்தது. கணவன் இருவரையும் கண்டித்து வந்ததால் அவரை கொலை செய்ய வைஷ்ணவி முடிவு செய்தார்.

அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி கள்ளக்காதலனுடன் சேர்ந்து அருண்குமாரை படுகொலை செய்தார். போலீசார் விசாரணையில் அவர்கள் கொலை செய்தது தெரிய வரவே கூடலூர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

சிறையில் இருந்த வைஷ்ணவி கடந்த 10 நாட்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார். போடியில் தனது தாத்தா வீட்டில் தங்கி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். அவருடன் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் யாரும் பேசவில்லை. இதனால் மனவேதனையில் இருந்த வைஷ்ணவி தனது வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலெட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News