செய்திகள்
தங்க சங்கிலி பறிப்பு

உளுந்தூர்பேட்டையில் பெண்ணிடம் 7½ பவுன் சங்கிலி பறிப்பு

Published On 2021-10-10 14:17 GMT   |   Update On 2021-10-10 14:17 GMT
உளுந்தூர்பேட்டையில் பெண்ணிடம் 7½ பவுன் சங்கிலி பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை:

உளுந்தூர்பேட்டை காமராஜர் தெருவை சேர்ந்த சிவராமன் மனைவி ராஜலட்சுமி (வயது 40). இவர் நேற்று மாலை வீட்டின் முற்றத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள் ராஜலட்சுமியிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளனர்.

உடனே அவர் தண்ணீர் எடுத்து வருவதற்காக திரும்பியபோது அவரது கழுத்தில் கிடந்த 7½ பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News