செய்திகள்
திருச்செந்தூர் டாஸ்மாக் கடை ஊழியர்கள் 8 பேர் ‘சஸ்பெண்டு’
டாஸ்மாக் கடையில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து விற்பனையாளர்களாக பணிபுரிந்த ஊழியர்கள் 8 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் - நெல்லை ரோட்டில் செயல்பட்டு வந்த அரசு டாஸ்மாக் கடை ஒன்றில் கடந்த 30-ந் தேதி தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் கணக்கில் வராத பணம் ரூ.28 ஆயிரத்து 280 கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
இந்நிலையில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அக்கடையில் விற்பனையாளர்களாக பணிபுரிந்த மேற்பார்வையாளர் மகேந்திரன், மந்திரவேல், லட்சுமணன், விற்பனையாளர்கள் அற்புதராஜ், முருகன், சிவகுமார், உதவி விற்பனையாளர்கள் சுதாகர் சாமுவேல் ராஜ், சுப்பையா ஆகிய 8 பேரையும் ‘சஸ்பெண்டு’ செய்து தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அய்யப்பன் உத்தரவிட்டார்.
திருச்செந்தூர் - நெல்லை ரோட்டில் செயல்பட்டு வந்த அரசு டாஸ்மாக் கடை ஒன்றில் கடந்த 30-ந் தேதி தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் கணக்கில் வராத பணம் ரூ.28 ஆயிரத்து 280 கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
இந்நிலையில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அக்கடையில் விற்பனையாளர்களாக பணிபுரிந்த மேற்பார்வையாளர் மகேந்திரன், மந்திரவேல், லட்சுமணன், விற்பனையாளர்கள் அற்புதராஜ், முருகன், சிவகுமார், உதவி விற்பனையாளர்கள் சுதாகர் சாமுவேல் ராஜ், சுப்பையா ஆகிய 8 பேரையும் ‘சஸ்பெண்டு’ செய்து தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அய்யப்பன் உத்தரவிட்டார்.