செய்திகள்
உள்ளாட்சி தேர்தல்- காலை 11 மணி நிலவரப்படி 19.61 சதவீதம் வாக்குப்பதிவு
9 மாவட்ட முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 19.61 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
சென்னை:
தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2 கட்டமாக தோ்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் இன்றும், 9-ந் தேதியும் (சனிக்கிழமை) 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய முதல் இரண்டு மணி நேரத்தில் 7.72 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2 கட்டமாக தோ்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் இன்றும், 9-ந் தேதியும் (சனிக்கிழமை) 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய முதல் இரண்டு மணி நேரத்தில் 7.72 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
காலை 11 மணி நிலவரப்படி 19.61 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்...குறுக்கு வழியில் வெற்றிபெற தி.மு.க. முயற்சி- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி