செய்திகள்
கோப்புபடம்

அவினாசியில் விபத்தில் காயமடைந்தவர் பலி

Published On 2021-10-06 07:52 GMT   |   Update On 2021-10-06 07:52 GMT
மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேன் பக்கவாட்டில் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த பண்ணாரி என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவினாசி:

அவினாசி பட்டரை பஸ் நிறுத்தம் அருகே கடந்த 3-ந்தேதி இரவு தென்னை ஓலை ஏற்றிக்கொண்டு ஒருவேன்அவினாசி நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேன் பக்கவாட்டில் கவிழ்ந்தது. 

இதில் வேனில் பயணம் செய்த பண்ணாரி ( வயது 45) என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு அவினாசி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அமைதிக்கப்பட்டார். 

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பண்ணாரி உயிரிழந்தார். இதுகுறித்து அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News