செய்திகள்
கோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை
கோவை மாவட்டம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் கோவை குற்றால அருவிக்கு நீர்வரத்து அதிகளவில் உள்ளது.
கோவை:
கொரோனா காரணமாக கோவை குற்றாலம் மூடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அரசு வழிகாட்டுதலின்படி நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த மாதம் 6-ந் தேதி முதல் சுற்றுலா மையங்கள் திறக்கப்பட்டன. இதனால் கோவை குற்றாலம் திறக்கப்பட்டதால் கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடித்து அருவியில் சுற்றுலா பயணிகள் நீராடி மகிழ்ந்தனர்.
இந்த நிலையில் மழை அதிகளவு பெய்ததால் அருவியில் அளவுக்கு அதிகமாக நீர் வந்ததால் கடந்த மாதம் 10-ந் தேதி முதல் கோவை குற்றாலம் சுற்றுலா மையம் 4 நாட்கள் மூடப்பட்டது. அதன்பிறகு திறக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது கோவை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் கோவை குற்றால அருவிக்கு நீர்வரத்து அதிகளவில் உள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி கோவை குற்றாலத்துக்கு சுற்றுலா பயணிகள் வர மீண்டும் தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா காரணமாக கோவை குற்றாலம் மூடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அரசு வழிகாட்டுதலின்படி நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த மாதம் 6-ந் தேதி முதல் சுற்றுலா மையங்கள் திறக்கப்பட்டன. இதனால் கோவை குற்றாலம் திறக்கப்பட்டதால் கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடித்து அருவியில் சுற்றுலா பயணிகள் நீராடி மகிழ்ந்தனர்.
இந்த நிலையில் மழை அதிகளவு பெய்ததால் அருவியில் அளவுக்கு அதிகமாக நீர் வந்ததால் கடந்த மாதம் 10-ந் தேதி முதல் கோவை குற்றாலம் சுற்றுலா மையம் 4 நாட்கள் மூடப்பட்டது. அதன்பிறகு திறக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது கோவை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் கோவை குற்றால அருவிக்கு நீர்வரத்து அதிகளவில் உள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி கோவை குற்றாலத்துக்கு சுற்றுலா பயணிகள் வர மீண்டும் தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.