செய்திகள்
கணவர் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை
அடிக்கடி செல்போனில் பேசியதை கணவர் கண்டித்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கோவை:
நாமக்கல் மாவட்டம் கொண்டமநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன்(வயது 33). இவரது மனைவி அனிதா(28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் பீளமேடு சிவஜோதி காலனியில் வசித்து வந்தனர்.
அனிதா அளவுக்கு அதிகமாக மாத்திரை தின்றதுடன் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அனிதா அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாகவும், இதனால் கணவர் கண்டித்ததால் மனம் உடைந்து அனிதா இந்த முடிவை தேடிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பீளமேடு போலீசார் விசாரிக்கிறார்கள்.
நாமக்கல் மாவட்டம் கொண்டமநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன்(வயது 33). இவரது மனைவி அனிதா(28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் பீளமேடு சிவஜோதி காலனியில் வசித்து வந்தனர்.
அனிதா அளவுக்கு அதிகமாக மாத்திரை தின்றதுடன் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அனிதா அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாகவும், இதனால் கணவர் கண்டித்ததால் மனம் உடைந்து அனிதா இந்த முடிவை தேடிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பீளமேடு போலீசார் விசாரிக்கிறார்கள்.