செய்திகள்
கோப்புபடம்.

குண்டடம் அருகே டிரான்ஸ்பார்மரில் ஆயில் திருட்டு - மின்தடையால் தவித்த பொதுமக்கள்

Published On 2021-10-04 09:09 GMT   |   Update On 2021-10-04 09:09 GMT
பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் குண்டடம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
குண்டடம்:

தாராபுரம் வட்டம் குண்டடத்தை அடுத்துள்ள மேட்டுக்கடை அருகே (எஸ்.எஸ்.1)  டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்தநிலையில் மர்ம நபர்கள் அதனை அணைத்து வைத்ததுடன், அதில் இருந்த 200 லிட்டர் ஆயிலை திருடிவிட்டு பின்னர் டிரான்ஸ்பார்மரில் சார்ஜ் செய்துவிட்டு சென்றுள்ளனர்.

இதனிடையை ஆயில் இல்லாமல் சார்ஜ் செய்யப்பட்டதால் மின்மாற்றியில் பழுது ஏற்பட்டதுடன், அப்பகுதியில் மின்தடையும் ஏற்பட்டது. 

இதனால் அப்பகுதி பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர். இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் குண்டடம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் டிரான்ஸ்பார்மரை மின் ஊழியர்கள்  சீரமைத்தனர். ஆயில் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் யாரென்று போலீசார் விசாரணை நடத்தி அவர்களை தேடி  வருகின்றனர்.  
Tags:    

Similar News