செய்திகள்
சாலையில் குளம் போல் தேங்கி கிடக்கும் மழைநீர்.

பல்லடம் கரடிவாவியில் சாலையில் குளம்போல் தேங்கி கிடக்கும் மழைநீர் - விபத்தில் சிக்கும் பொதுமக்கள்

Published On 2021-10-04 08:36 GMT   |   Update On 2021-10-04 08:36 GMT
கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் மழைநீர் தேங்கி குளம் போல் உள்ளது.
பல்லடம்:

பல்லடம் அருகே உள்ளது கரடிவாவி ஊராட்சி .இங்கு சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கரடிவாவியிலிருந்து அனுப்பட்டி செல்லும் ரோட்டில் பள்ளம் ஏற்பட்டு நீண்ட நாட்களாகிறது. இந்தப் பள்ளத்தில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. 

மேலும் வாகனங்கள் செல்லும்போது மழைநீர் இருப்பதால் சரியாக கவனித்து வாகனங்களை இயக்க முடியாமல் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. 

இதுகுறித்து பலமுறை, நெடுஞ்சாலைத்துறை, ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் இன்னும் சரி செய்யப்படவில்லை என அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர். 

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் மழைநீர் தேங்கி குளம் போல் உள்ளது. இதில் இருசக்கர வாகன ஓட்டிகள் ரோட்டில் குழிகள் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி விழுந்து விபத்துகள் ஏற்படுகின்றது.

எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து ரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

Similar News