செய்திகள்
அமராவதி அணை நீர்மட்டம் 83.53 அடியாக உயர்வு
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
உடுமலை:
உடுமலை அருகே உள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இதன் மூலம் திருப்பூர் ,கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன.
பழைய ஆயக்கட்டு பகுதிக்கு ஆற்று வழியாகவும் புதிய ஆயக்கட்டு பகுதிக்கு பிரதான கால்வாயிலும் தண்ணீர் திறக்கப்படுகிறது. இது தவிர கல்லாபுரம் ராம குளம் வாய்க்கால்களிலும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. மூன்றாவது முறையாக அணை நிரம்பி உபரிநீர் திறந்து விடப்பட்டது. இந்த ஆண்டில் பெரும்பாலான நாட்கள் அணை நீர்மட்டம் 80 அடிக்கு மேல் இருந்து வருகிறது.
அணையின் நீர்மட்டம் தற்போது 83.53 கன அடியாக உள்ளது. 141 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 899 கன அடி நீர் பாசனத்திற்காக வெளியேற்றப்படுகிறது.