செய்திகள்
கைது

பாபநாசத்தில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய வாலிபர் கைது

Published On 2021-10-01 11:25 GMT   |   Update On 2021-10-01 11:25 GMT
பாபநாசத்தில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய வாலிபரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
பாபநாசம்:

பாபநாசம் இன்ஸ்பெக்டர் அழகம்மாள் மற்றும் போலீசார் பாபநாசம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பாபநாசம் படுகை புதுத்தெரு குடமுருட்டி ஆற்றில் 2 மோட்டார் சைக்கிளில் 3 வெள்ளை நிற சாக்கு மூட்டைகளில் மணல் கடத்தி வந்த கபிஸ்தலம் மிஷின் தெருவை சார்ந்த சந்தோஷ்குமார் (வயது 31) என்ற வாலிபரை பாபநாசம் போலீசார் கைது செய்து வழக்கு பதிந்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.

மாஜிஸ்திரேட் சிவகுமார் சந்தோஷ்குமாரை 15 நாளில் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
Tags:    

Similar News