செய்திகள்
இளம்பெண் மாயம்

காதல் திருமணம் செய்த பெண் திடீர் மாயம்

Published On 2021-09-30 10:39 GMT   |   Update On 2021-09-30 10:39 GMT
திருவட்டார் அருகே காதல் திருமணம் செய்த பெண் திடீரென மாயமானதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவட்டார்:

திருவட்டாரை அடுத்த சாமியார் மடத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் ( வயது 32).

ராஜேஷ் சொந்தமாக மினி டெம்போ வாங்கி அப்பகுதியில் ஓட்டி வந்தார். இவரது மனைவி திவ்யா (29). இருவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் முடிந்த பின்னர் இருவரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது.

2 நாட்களுக்கு முன்பு மீண்டும் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் திவ்யா மனம் உடைந்து காணப்பட்டார். நேற்று வீட்டிலிருந்து வெளியே சென்ற திவ்யா பின்னர் வீடு திரும்பவில்லை.

நீண்ட நேரமாகியும் திவ்யா வீடு திரும்பாததால் கணவர் ராஜேஷ், அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் அக்கம்பக்கத்தினர் மற்றும் திவ்யாவின் தோழிகள் வீடுகளில் தேடினார்.

எங்கு தேடியும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அவர் மனைவி திவ்யாவை காணவில்லை என்றும் அவரைத் தேடி கண்டுபிடித்து தருமாறு திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் வழக்கு பதிவு செய்து மாயமான இளம்பெண் திவ்யாவை தேடி வருகிறார்.

Tags:    

Similar News