செய்திகள்
கொரோனா உறுதி செய்யப்பட்டதால் விவசாயி தற்கொலை
கோவை அருகே கொரோனா உறுதி செய்யப்பட்டதால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
கோவை அருகே உள்ள செட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் நாச்சிமுத்து (வயது 70) விவசாயி. கடந்த சில நாட்களாக இவருக்கு சளியுடன் காய்ச்சல் பாதிப்பு இருந்தது.
இதனையடுத்து நாச்சிமுத்து அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நாச்சிமுத்து விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக நாச்சிமுத்துவை மீட்டு சுந்தராபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை அருகே உள்ள செட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் நாச்சிமுத்து (வயது 70) விவசாயி. கடந்த சில நாட்களாக இவருக்கு சளியுடன் காய்ச்சல் பாதிப்பு இருந்தது.
இதனையடுத்து நாச்சிமுத்து அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நாச்சிமுத்து விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக நாச்சிமுத்துவை மீட்டு சுந்தராபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.